கற்றையாய் நகரும் மேகங்களைக் கடந்து
சிகரங்களின் உச்சியில் ஒற்றையாய் ஏறி
நின்று தேடுகிறேன், உயிர் வரை பரவிய
உன் நினைவின் சுவடுகளை………………….

நிலவின் நிழலில் ஒளிந்து கிடக்கும்
ஒற்றைத் தாமரைக்குள் நீ ஓடி ஒளிந்ததை
அருகில் பறந்த வெள்ளைப் பறவை
மெல்லக் குனிந்து என் காதில் சொன்னது.

உயர்ந்த மரமொன்று கிளை நீட்டி
உதவ நான் கீழறங்கி நடக்கையில்,
ஓவியங்களில் படிந்திருக்கும் வண்ணத்
தீற்றலாய் எண்ணங்களில் நிறைகிறாய் நீ…….

விண்ணைக் கிழித்து வெளிவந்த சின்ன மின்னலின்
விளக்கொளியில் உன் கள்ளச்சிரிப்பை நான் கண்டறிய,

மெல்லப் புரிகிறது……"என் உலகம் நீயென்ற உண்மை".

0 comments: